Friday, December 23, 2016

நெருங்காதே நீரிழிவே! 4 டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்

4-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்
DiabetesDr.VijayaraghavanSujatha Desikan
 

desikandr-vijayaraghavan
உங்களுக்கு சின்ன வயசுல தட்டம்மை வந்திருக்கா?”
வந்திருக்கு.”
இனிமே உங்க வாழ்நாளில் உங்களுக்கு தட்டம்மை வராது.”
ஏன்?”
ஏன்னா, தட்டம்மை ஒருவிதமான வைரஸ். அது வந்தா அதை எதிர்க்கும் சக்தி நம்ம உடம்புல வருது. அதனாலதான் அது திரும்பவராது. வந்தாலும் அதை நம் உடல் எதிர்த்துவிடும்.
இன்னொரு உதாரணம், குடிகாரங்களைப் பாருங்க. முதலில் கொஞ்சமாக ஆரம்பிப்பாங்க, அதற்கு உடல் எதிர்ப்பு தெரிவிக்கும். இந்த எதிர்ப்புனால கொஞ்ச நாளில் குடிச்சாபோதை ஏறாது. உடனே அவர்கள் அதிகமாகக் குடிப்பாங்க. உடல் மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும். இன்னும் அதிகமாகக் குடித்து, குடியின் எல்லைக்கே போய்விடுவார்கள். இன்சுலின் எதிர்ப்பும்  இதே போல்தான்.”
அதிக இன்சுலினால் இன்சுலின் எதிர்ப்பு உண்டாகிறதா? அல்லது இன்சுலின் எதிர்ப்பால் அதிக இன்சுலின் சுரக்கிறதா?”
இந்தக் கேள்வி, கோழியிலிருந்து முட்டையா, முட்டையிலிருந்து கோழியா? என்பது போல. ஒரு விதமான ஆபத்தான சுழற்சி. ‘விஷியஸ் சைக்கிள்’ என்பார்கள்.”
இதுக்கும் நாம் குண்டாவதற்கும் என்ன காரணம் டாக்டர்?”
இன்னொரு ஹார்மோன்பத்திசொல்றேன். அதுக்குப் பெயர் லெப்டின்.”
லெப்டினா?”
ஆமாம். 1890ல் இதைக் கண்டுபிடிச்சாங்க.
சின்ன பையன் ஒருத்தன் திடீர்னு குண்டானான். என்னன்னுசொதிச்சுப் பார்க்கும்போது மூளையின் ஹைப்போதலாமஸ் (hypothalamus) என்ற பகுதியில சேதம். அதனால் ஒபிசிட்டி, ஹார்மோன் கோளாறுன்னு கண்டுபிடிச்சாங்க. ஹைப்போதலாமஸ் பகுதியில இருக்கும் நியூரான்களுக்கும் நம் உடல் எடைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு யூகிச்சாங்க.”
அப்பதான் லெப்டின் கண்டுபிடிச்சாங்களா?”
இல்லை. 1994ல் தான் லெப்டினைக் கண்டுபிடிச்சாங்க. லெப்டின் என்றால் கிரேக்கத்தில் ஒல்லி. லெப்ட்டின் கொழுப்பு செல்கள் உற்பத்தி செய்து உடலுக்கு ஒரு சிக்னல் கொடுக்குது.”
என்ன சிக்னல்?”
போதும், இதுக்கு மேலே சாப்பிடாதே என்று! ஒரு கால் கிலோ மைசூர்ப்பாகை சின்னப் பையனிடம் கொடுத்தால், ஒண்ணு இல்ல ரெண்டுக்கு மேல சாப்பிடமாட்டான். திகட்டிவிடும். ஆனால் நீரிழிவு உள்ளவர், ராத்திரி யாருக்கும் தெரியாம ஒன்றில் ஆரம்பித்து, ஒன்றை மட்டும் மீதம் வைப்பார்.”
ஆமாம் டாக்டர். நான்கூட முன்பு…”
இது உங்க பிரச்னை மட்டும் இல்லை, பலருக்கும் இருக்கு. உங்க மூளையில் ஹைப்போதலாமஸ் (hypothalamus) பகுதிக்கு லெப்டின் சிக்னல் வேலை செய்யவில்லை. அதனால சாப்பிட்டுக்கொண்டே இருப்போம். மூக்கு வழியாக வெளியே வரும்வரை!”
ஆனால் ஏன் லெப்டின் வேலை செய்யவில்லை?”
அதிக இன்சுலினால்தான்!”
விளக்கமுடியுமா டாக்டர்?”
அதிக இன்சுலின் லெப்டின் ஓட்டத்தைத் தடை செய்யுது. ‘சாப்பிட்டது போதும்’ என்ற சிக்னல் மூளைக்கு எட்டாது. இதனால் மேலும் அதிக லெப்டின் உற்பத்தி ஆகும். மேலும் மேலும் அதிக லெப்டின் உற்பத்தியானால்? இப்ப உங்களுக்கே தெரிந்திருக்கும்.
அடுத்து என்ன நடக்கும்?”
லெப்டின் ரெஸிஸ்டன்ஸ்.”
சரியாசொன்னீங்க. மூளையில் இன்னொரு பகுதியும் இருக்கு நியூக்ளியஸ் அகும்பென்ஸ் (nucleus accumbens). இங்கேதான் நமக்குத் திருப்தி, இன்பம் எல்லாம் ஏற்படுது (it is our reward centre) ஒரு மைசூர்ப்பாகு சாப்பிட்ட பின் நமக்கு ஏற்படும் திருப்தி, ஆனந்தம்.
feel good‘ என்பார்கள், அது இங்கேதான் நடக்குது. லெப்டின் வேலை செய்யாதபோது ஒரு மைசூர்ப்பாகு ஆனந்தத்தைக் கொடுக்காமல், தொடர்ந்து சாப்பிட்டு டப்பா காலியாகும்வரை சாப்பிட்டுக்கொண்டே இருக்க வைக்கிறது.”
குடித்துக்கொண்டே இருக்கும் குடிகாரன் போலத்தானே டாக்டர்?”
ஆமாம். அதிக இன்சுலினால் லெப்டின் வேலை தடைபட்டு, மேலும் உங்களுக்குப் பசிக்குது. ஜாஸ்தி சாப்பிட்டு இன்னும் ஜாஸ்தி இன்சுலின் சுரக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு கூடுகிறது. அதைச் சரிசெய்ய மேலும் இன்சுலின் எடுத்துக்கொள்கிறீர்கள். மேலும் மேலும் சாப்பிட்டு, மேலும் கொழுப்பை சேகரித்து நீங்கள் குண்டாகறீங்க. முதல் கேள்விக்கு பதில் ”We do not get fat because we overeat. We overeat because we get fat!” என்கிறார் Gary Taubes.”
தலை சுத்துகிறது டாக்டர். சர்க்கரையைவிட இன்சுலின்தான் பெரிய பிரச்னை போல.”
ஆமாம். ஆரம்பத்துல அதிக ஈரப்பதம் இருந்து கொண்டே இருந்தால் துருப்பிடிப்பது மாதிரிதான். அதிக இன்சுலின் இருந்துகொண்டே இருந்தால் இன்சுலின் எதிர்ப்பு உண்டாகி, இதயம், கிட்னி, கண், காது என்று எல்லாம் ரிப்பேர் ஆகுது. அதனால்தான் நீரிழிவு உள்ளவர்களுக்கு எல்லா உறுப்புகளும் டாமேஜ் ஆகுது.
இதைப் பற்றி டாக்டர் ஜோசப் கிராஃப்ட் (Dr Joseph Kraft1976ல் ஒரு சுவாரஸ்யமான ஆய்வு செஞ்சார் அவர். 1976ல் பதினாலாயிரம் பேரை நீரிழிவு உள்ளவர்கள், நீரிழிவு இல்லாதவர்கள் என்று இரண்டு குழுக்களாகப் பிரித்தார். அவர்களுக்கு OGTT டெஸ்ட் செய்தார்.”
”OGTT டெஸ்டுன்னா என்ன டாக்டர்?”
‘ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்.’ அதாவது வெறும் வயிற்றில் குளுக்கோஸ் கொடுத்து அதற்கு உங்க உடம்பு இரண்டு மணி நேரத்தில எப்படி ரியாக்ட் செய்யுதுன்னு பார்ப்பது.”
பரிசோதனையில நீரிழிவுக்காரர்களுக்கு, அதிக சர்க்கரை இருந்திருக்க வேண்டுமே.”
ஆமாம். எதிர்பார்த்த மாதிரியே நீரிழிவு உள்ளவங்களுக்கு ரத்தத்துல சர்க்கரை அதிகமா இருந்தது. டாக்டர் கிராஃப்ட் புத்திசாலித்தனமாக இன்னொரு பரிசோதனையையும் கூடவே செஞ்சார். சர்க்கரையின் அளவுடன் இன்சுலின் அளவையும் சேர்த்து எடுத்தார். நீரிழிவு உள்ளவங்களுக்கு சர்க்கரை, இன்சுலின் இரண்டும் அதிகமா இருந்தது.”
இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லையே?”
ஆச்சர்யம் நீரிழிவு இல்லை என்று நினைத்துக் கொண்டவர்களுக்குத்தான்!”
நீரிழிவு இல்லாதவங்களுக்கு ரத்தத்துல சர்க்கரை அளவு சரியா இருந்திருக்குமே?”
சர்க்கரை அளவு சரியா இருந்தது. ஆனா இன்சுலின் அளவு மூணுல இரண்டு பங்கு அதாவது 75 சதவிகிதம் பேருக்கு அதிகமா இருந்தது. இவங்களுக்கு நிச்சயம் பிற்காலத்தில உடல் பாதிப்பு இருக்கும். இதயம், கிட்னி, குறிப்பாக நீரிழிவால பாதிக்கப்படுவாங்கன்னு கணிச்சார்.”
என்ன நடந்தது?”
அவர் கணிச்சது மாதிரியே நடந்தது. டாக்டர் கிராஃப்ட் ஆராச்சிக் குறிப்புகளைப் பாருங்க” என்று வரைபடத்தைக் காண்பித்து விளக்கினார் டாக்டர்:
பச்சையில் இருப்பவர்கள் (1) :
குளுக்கோஸ் சாப்பிட்டபின் இன்சுலின் நிலை உயர்கிறது. ஆனால் சுமார் மூன்று மணி நேரத்தில் மீண்டும் குறைந்து விடுகிறது. இவர்கள் ஒன்றும் பிரச்னை இல்லாத ‘நார்மல்’ மக்கள்.
மஞ்சள் (2) குளுக்கோஸ் சாப்பிட்ட பிறகு அதன் சுமையை (Load) எதிர்கொள்ளும் வகையில், இங்கேயும் இன்சுலின் நிலை விரைவில் உயர்கிறது. மேலே சொன்ன ‘நார்மல்’ நபர்களைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து, கீழே இறங்கிவர 4-5 மணி நேரம் ஆகிறது.”
இதுதானே டாக்டர் ஹைபர் இன்சுலினிமியா (hyperinsulinemia).”
ஆமாம்.”
ஆரஞ்சு(3), சிவப்பு (4) நிறங்களில் இருப்பவர்களைப் பாருங்க. அவங்களுக்கு இன்சுலின் அளவு இறங்க, அஞ்சு இல்ல ஆறு மணி நேரம் கூட ஆகலாம்.
அதிக இன்சுலின் இருந்துகொண்டே இருந்தால் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் வந்துடுமே.”
ஆமாம். நிச்சயம் இன்சுலின் எதிர்ப்பு வந்து பத்து பதினைந்து வருஷத்துல டயபட்டீஸ் வரும் என்று ஜோசியமே சொல்லலாம்!”
இப்ப நாம சர்க்கரை அளவுதானே டெஸ்ட் செய்யறோம். இது சரியான டெஸ்ட் இல்லையா?”
அப்படியில்ல இன்சுலின் ரொம்ப அதிகமானா இன்சுலின் எதிர்ப்பு உண்டாகி, இன்சுலினால ரத்தத்துல இருக்கிற சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாம, அதனால ரத்தத்துல சர்க்கரை அளவு கூடுது, பிறகு இரண்டும் அதிகமானா-Its a double edged sword.”
அப்ப சர்க்கரை வெறும் அறிகுறிதான், அடியாள் மாதிரி. வில்லன் இன்சுலின், சரியா டாக்டர்?”
சரியாசொன்னீங்க. டயபடீஸுக்கு இன்சுலின் கொடுத்துக் கொடுத்து ரத்தத்துல சர்க்கரை அளவைக் குறைப்பதால, நீரிழிவு மேலும் மோசமாகுது! அது எப்படின்னு சொல்றேன். நீங்க சமீபத்தில ஊருக்கு சூட்கேஸ் எடுத்துக்கொண்டு தானே போனீங்க?”
ஆமாம்.”
இப்ப உங்க சூட்கேஸில் வேஷ்டி, துண்டு, போர்வை, பேன்ட், சட்டை, டி-ஷர்ட் எல்லாம் பேக்கிங் முடிச்சபோது, போன வாரம் உங்க மனைவி வாங்கிய புதுச் சட்டை நினைவுக்கு வருது. ஆனால் பெட்டியில இடமில்லை. ஏற்கெனவே பேக் செய்ததை வெளியே எடுக்கவும் மனசு வரலை. என்ன செய்வீங்க?”
சட்டையை உள்ளே வெச்சு, அழுத்தி மூடி ‘ஜிப்பை’ போடுவேன்.”
இப்ப மேலும் ஒரு எக்ஸ்ட்ரா டவல் உள்ளே வைக்க வேண்டும். என்ன செய்வீங்க?”
கஷ்டம்தான். சூட்கேஸ்மீது ஏறி உட்கார்ந்துடுவேன்!”
இப்படியே செஞ்சிக்கிட்டு இருந்தா உங்க சூட்கேஸ் என்னாகும்?”
சூட்கேஸ் வாய் இருந்தா அழும். ‘ஜிப்’ பிளந்துக்கும், இல்ல வீக்கான இடத்தில் தையல் விட்டிருக்கும்.”
இதேதான் உங்க உடம்புக்கும் ஆகுது. நம் செல்தான் அந்த சூட்கேஸ். குளுக்கோஸ்தான் நம் துணி மணிகள். அதை அழுத்தம் கொடுத்து உள்ளே செலுத்துவது இன்சுலின்.”
இப்ப சர்க்கரை அதிகமா இல்லனா சுலபமா மூடலாம், அதிகமா இருந்தா அதிக இன்சுலின் உற்பத்தி செய்து பெட்டியை அழுத்தம் கொடுத்து மூட முயற்சி செய்கிறோம், மாத்திரை மூலம். பெட்டி உடையற மாதிரி அதிக இன்சுலின், மேலும் அதிக இன்சுலின் என்று உடம்பு பார்ட் பார்ட்டா ரிப்பேர் ஆகுது.”
ஓ! அதனாலதான் நீரிழிவு உள்ளவங்களுக்கு இதயம், கை, கால், கிட்னி, கண் என்று எல்லா உருப்புகளும் சேதமடையுதா? அப்ப நீரிழிவு (இன்சுலின்) மாத்திரை சாப்பிடக் கூடாதா?”
(அடுத்த வாரம் சொல்றேன்)
-நன்றி கல்கி
Source: Balhanuman's Blog  November 18, 2016
https://balhanuman.wordpress.com/2016/11/18/4%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE/

Monday, December 19, 2016

நெருங்காதே நீரிழிவே! 3 டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்




desikandr-vijayaraghavan
டாக்டர் போன வாரம் ‘குண்டாக இருப்பதனால நிறைய சாப்பிடுறாங்களா? இல்ல நிறைய சாப்பிட்டு அதனால குண்டாகிறாங்களா?’ என்ற கேள்வியுடன் முடித்திருந்தோம்.”
இந்தக் கேள்விக்கு முன்னாடி வீட்டுல இரும்பு ஜன்னல் கம்பி, கைப்பிடி எல்லாம் துருப்பிடிச்சிருப்பதைப் பார்த்திருக்கீங்களா?”
பார்த்திருக்கிறேன். திருவல்லிக்கேணியில் ‘எவர்சில்வர்’ பாத்திரம் கூட துருப்பிடிக்கும்.”
ஓ. அப்படியா? கவனிச்சீங்கனா உடனே துருப்பிடிக்காது; கொஞ்ச நாள் ஆகும்.”
ஆமாம். துருப்பிடிக்க கொஞ்ச நாள் ஏன் சில மாசங்கள் கூட ஆகும். தொடர்ந்து ஈரப்பதம் இருந்து கொண்டே இருந்தால் படிப்படியாகத் துருப்பிடிக்கும்.”
எக்ஸாட்லி. துருப்பிடிப்பதற்குக் கொஞ்ச கால அவகாசம் வேணும்… ஈரப்பதம், உலோகத்தின் தன்மை என்று நிறைய விஷயங்கள் இருக்கு. உடல் பருமனும் அதே மாதிரிதான். யாரையாவது குண்டாக்க வேண்டும் என்றால் சுலபமான வழி இருக்கு தெரியுமா?”
தெரியாதே.”
தொடர்ந்து இன்சுலின் எடுத்துக்கொள்ளச் சொல்லணும். சிம்பிள். நீங்க என்ன தான் மன உறுதியோட, சாப்பாட்டைக் கட்டுப்படுத்தி, உடற்பயிற்சி செஞ்சாலும் நீங்க குண்டாவது நிச்சயம்.”
அட எப்படி டாக்டர்?”
இன்சுலின் ஒரு ஹார்மோன். அதனால முதல்ல ஹார்மோன் எப்படி வேலை செய்யும்னு தெரிஞ்சுக்கோங்க. ஹார்மோன் என்பவை மூலக்கூறுகள் (molecules). நம் உடம்புல இருக்கும் செல்களுக்குச் செய்தி அனுப்புகிறது.”
ரொம்ப டெக்னிகலா இருக்கே!”
சிம்பிள். நீங்க ஒரு குலோப்ஜாமூன் சாப்பிட்ட உடனே சர்க்கரை உங்க ரத்தத்தில் கலக்கிறது. உடனே உங்க உடலில் இன்சுலின் சுரக்க செய்தி அனுப்புகிறது. ஏன் தெரியுமா?”
நம் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை எனர்ஜியாக, சக்தியாக உபயோகிக்க.”
ஆமாம். சாப்பிட்டதும் என்ன நடக்கிறது? நம் வயிறு, சிறுகுடலில் சாப்பாடு உடைக்கப்படுகிறது. சாப்பாட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. கார்போஹைட்ரேட் அதாவது மாவுச்சத்து,
2. ப்ரோட்டின் என்னும் புரதம்;
3. ஃபேட் என்னும் கொழுப்பு.
புரதங்கள் ‘அமினோ’ அமிலமாக உடைக்கப்படுகிறது. கொழுப்பு கொழுப்பு அமிலங்களாக உடைக்கப்படுகிறது.”
கார்போஹைட்ரேட் என்ன ஆகிறது?”
சொல்றேன்… சர்க்கரை, கார்போஹைட்ரேட் இரண்டும் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலக்கும். கிட்டத்தட்ட நம் உடலில் இருக்கும் எல்லா செல்களும் இந்த குளுக்கோஸை உபயோகிச்சுக்கலாம். குளுக்கோஸ் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும் போது, ‘இன்கிரிட்டின்’ (incretin)என்ற இன்னொரு ஹார்மோனை சுரக்கச் செய்யுது.”
இது எதுக்கு?”
இன்கிரிட்டின் ரத்தத்தில் கலந்து, கணையத்தை(Pancreas)அடைந்து, பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்யத்தான்.”
ஆச்சர்யமாக இருக்கே!”
இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி. நம் உடம்புல எவ்வளவு ரத்தம் இருக்கு?”
சுமார் ஐந்து லிட்டர்?”
ஆமாம். ஐந்து லிட்டர் ரத்தத்துல எவ்வளவு சர்க்கரை இருக்கலாம் தெரியுமா?”
தெரியலையே…”
ஒரு டீஸ்பூன் அளவு தான். அதாவது நாலு கிராம்.”
அதுக்கு மேலே இருந்தா என்ன ஆகும் ?”
அதிகமா இருந்தா கெடுதல். முன்பு சொன்ன 3T – ‘Excess Sugar is Toxic’. அந்த அதிகமான சர்க்கரையைக் குறைக்கத்தான் இன்சுலின் சுரக்குது”ஒரு டவுட் – சர்க்கரை, கார்ப் எல்லாம் குளுக்கோஸாக மாறுகிறதா?”
ஆமாம், சர்க்கரை, கார்ப் இரண்டுமே உடலுக்குள் போனால் குளுக்கோஸ் தான்.”
குளுக்கோஸ் என்ன ஆகுது?”
நம் உடலுக்குத் தேவையான சக்தியாய் பயன்படுது. எக்ஸ்ட்ராவா இருப்பது கிளைகோஜெனாக (சேமிக்கப்படும் சர்க்கரையின் வடிவம்) சேமிக்கப்படுது.”
இது எங்கே நடக்கிறது?”
கல்லீரல் (liver) மற்றும் தசைகளில் (muscle). ஆனா அங்கே அதிகம் சேமிக்க முடியாது. பலூன் மாதிரி ரொம்ப ஊத முடியாது.”
மேலும் அதிகப்படியாய் இருந்தா?”
உங்களுக்கு நீரிழிவு என்று அர்த்தம். நீங்க எடுத்துக்கொள்ளும் மருந்து(மாத்திரை அல்லது இன்சுலின்) அதிக இன்சுலினை சுரக்கச் செய்யுது. அந்த எக்ஸ்ட்ரா சர்க்கரையைக் கொழுப்பாய் மாத்துது. அதனால தான் நீங்க குண்டாகறீங்க.”
அட கடவுளே.”
நம் செல்களுக்குள் குளுக்கோஸ் எப்படிப் போகுதுன்னு சொல்றேன்.”
சொல்லுங்க.”
‘செல்’லை ஒரு ரூம் போல கற்பனை பண்ணிக்கோங்க. செல்சுவரில் ‘இன்சுலின் ரிசெப்டர்’ (insulin receptor) என்னும் பூட்டு உள்ளது. பூட்டியிருக்கும் அந்த ரூமைதிறக்கும் மந்திரச் சாவிதான் இன்சுலின். அந்தப் பூட்டைத் திறந்து குளுக்கோஸை செல்லுக்குள் நுழைக்க வேண்டும். அதுதான் உடலுக்கு சக்தியாக மாறுகிறது. உங்களை ஓட, நடக்க, பேச, யோசிக்க, கணக்குப் போட வைக்குது. இப்ப ஒரு நாலாங்கிளாஸ் கணக்கு.”
கேளுங்க.”
நீங்க சாப்பிட்ட உணவுல இருபது குளுக்கோஸ் மூலக்கூறு இருக்குனு வெச்சுப்போம். அதிலிருந்து பத்து செல்களுக்கு இரண்டு குளுக்கோஸ் அனுப்பணும். ஒரு இன்சுலின் சாவி இரண்டு குளுக்கோஸை அனுப்ப முடியும் என்று வைத்துக்கொண்டால் நம் உடல் எவ்வளவு சாவி தயாரிக்க வேண்டும்?”
பத்து.”
ஆமாம். சாவி சரியா வேலை செய்யலேனா? அது தான் பிரச்னை. பத்து சாவியால பத்து குளுக்கோஸைத் தான் உள்ளே அனுப்ப முடியுது வெச்சுக்கோங்க. அப்ப மீதம் இருக்கும் பத்து குளுக்கோஸை எப்படி அனுப்புவது ?”
மேலும் பத்து சாவி தயாரிக்கணும்.”
ஆமாம். இங்கே சாவி தான் இன்சுலின். மேலும் மேலும் சாவி ஜாஸ்தியாகி பூட்டைத் திறந்துகொண்டே இருந்தா பூட்டு ரிப்பேராகி மேலும் மேலும் இன்சுலின் சுரந்து அதுவே இன்சுலின் எதிர்ப்புக்குக் காரணமாகிறது (Insulin Resistance).”
அது ஏன் டாக்டர்?”
இப்ப போனவாரம் யாத்திரை போயிட்டு வந்தீங்க. அதில குழந்தைகளும் வந்தாங்களா?”
கைக்குழந்தையைக் கூட அழைச்சுட்டு வந்தாங்க.”
குழந்தைகள் சத்தம், அமர்க்களத்துக்கு நடுவிலும் தூங்கியிருக்குமே?”
ஆமாம். நான் கூட ஆச்சர்யப்பட்டேன். எப்படி அவ்வளவு சத்தத்துக்கு நடுவுல தூங்க முடியுதுன்னு.”
இதையே நீங்க ரயில்வே ஸ்டேஷனில், பஸ் ஸ்டாண்ட், தியேட்டர்ல பார்த்திருப்பீங்க. ஆனால் அதே குழந்தை வீட்டுல தூங்கும்போது ‘க்ரீச்’ன்னு கதவு மூடுற சின்னச் சத்தம் கேட்டாகூட குழந்தை எழுந்துடும்.”
அட ஆமாம்… இது ஏன் ?”
ரயில்வே ஸ்டேஷனில் தூங்கும் குழந்தை சத்தத்துக்குத் தன்னைப் பழக்கிக்கொண்டுவிட்டது. சரியாகச் சொல்லணும்னா சத்தத்தை எதிர்க்க, புறக்கணிக்க கற்றுக்கொண்டுவிட்டது.”
ஆச்சர்யமாக இருக்கு. அப்ப நம்ம தாலாட்டு பாட்டு கூட அதுக்குச் சத்தமா டாக்டர்?”
ஆமான்னு சொன்னா அம்மாக்கள் சண்டைக்கு வந்துடுவாங்க. இதுபோல பல விஷயங்களில் எதிர்ப்பு உணர்வு ஏற்படுது.”
உதாரணம்?”
நிறைய இருக்கு… ஆனால் நம் உடலில் எப்படி எதிர்ப்பு உணர்வு ஏற்படுது? உடம்புல ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டா அதை எதிர்கொள்ள அதுக்கு நேர் எதிராகச் செய்யல்பட்டு பழைய நிலைக்குத் திரும்ப முயற்சி செய்யுது. குளிர்காலத்துல அதை எதிர்கொள்ள நம் உடல் தன்னைத் தானே சூடாக்கிக்கொள்கிறது. வெயில் காலத்துல?”
வேர்த்துக்கொட்டி தன்னைத் தானே கூலாக்கிக்கொள்கிறது.”
எக்ஸாட்லி. ஆக சூழ்நிலைக்கேற்ப உடம்பு அட்ஜஸ்ட் (adapt) செஞ்சுக்கிறது. அதனால்தான் நாம் இன்னும் உயிரோடு இருக்கோம். இப்ப இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அல்லது இன்சுலின் எதிர்ப்புக்கு வரலாம். இன்சுலின் எதிர்ப்பு நம் உடலுக்குத் தேவையா ?”
இன்சுலின் ரத்தத்தில் இருக்கும் குளுகோஸை குறைச்சு அது ரொம்ப குறைச்சா உடனே ‘லோ சுகர்’ ஆகிடும். அதுனால இன்சுலின் எதிர்ப்பு தேவை. சரியா?”
கரெக்ட். ஆனா அதிக இன்சுலின் எதிர்ப்பு அளவுக்கு அதிகமானா தான் பிரச்னையே.”
இது எப்படி டாக்டர்?”
இது இன்சுலினுக்கு மட்டுமில்ல, நாம் தொடர்ந்து ஆன்ட்டிபயாட்டிக் எடுத்தாலும் இதே பிரச்னைதான். அதாவது ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்பு உண்டாகி ஆன்ட்டிபயாட்டிக் வேலை செய்யாமல் வேறு ஆன்ட்டிபயாட்டிக் அல்லது அதிக டோஸேஜ் எடுத்துக் கொள்கிறோம்.”
உங்களுக்கு சின்ன வயசுல தட்டம்மை (measles) வந்திருக்கா?”
வந்திருக்கு.”
இனிமே உங்க வாழ்நாளில் உங்களுக்கு தட்டம்மை வராது.”
ஏன்?”
(அடுத்த வாரம் சொல்றேன்)
-நன்றி கல்கி
Source: Balahanuman November 11, 2016
https://balhanuman.wordpress.com/2016/11/11/3%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE/

Sunday, December 11, 2016

நெருங்காதே நீரிழிவே! 2 டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்





desikandr-vijayaraghavan
டாக்டர் இந்த வாரம் இன்னொரு கேள்வி. அப்பா, அம்மா இருவருக்கும் நீரிழிவு இருந்தால் பிள்ளைகளுக்கும் டயபட்டீஸ் வந்துவிடுமா?”
நல்ல கேள்வி. மரபியலில் “Epigenetics‘ (எபிஜெனடிக்ஸ்) என்று சொல்லுவாங்க.”
அப்படின்னா?”
காலங்காலமா மாறிவரும் சுற்றுச்சூழல், பழக்க வழக்கங்களால் நம் மரபணுக்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு, தலைமுறை தலைமுறையாகப் பிள்ளை, பேரன், பேத்திகளுக்கு மரபுவழியாகப் பரவுகிறதா என்ற ஆராச்சி.”
சுவாரசியமான விஷயம். அப்ப நம் ஜீன்கள் மாறிவிடுமா?”
ஜீன்கள், அதாவது மரபணுக்கள் மாறுவதில்லை. மாறுவதற்குப் பல ஆயிரம் வருஷங்கள் ஆகும். ஆனால் நம் செல்லுக்குள் அதாவது உயிரணுக்களுக்குள் மரபணுக்களை மாற்ற சில சமாசாரங்கள் இருக்கு. இதுதான் ‘எபிஜெனடிக்ஸ்’.
அப்பா சொத்து பிள்ளைக்கு என்பதுபோல அப்பன் புகைத்தது, குடித்தது, கண்டபடி சாப்பிட்டது, கவலைப்பட்டது எல்லாம் எபிஜீன்களின் வழியாகப் பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் வந்து சேர்கிறது.”
அதனால்தான் நம் அப்பா அம்மாவுக்கு டயபடீஸ் என்றால் நமக்கும் வருகிறதா?”
அப்படியில்ல. அப்பா செஞ்ச அதே தப்பை பிள்ளையும் செய்தால் சுலபமாக வரும். செய்யாத வரை வராது. உதாரணமா பத்து வருஷத்துக்கு முன்னாடி நாலாயிரம் பேர்ல ஒருத்தருக்கு டயபடீஸ். இப்ப நாலு பேருல ஒருத்தருக்கு ‘பிரிடயபடீஸ்’ இல்ல டயபடீஸ் இல்லேனா உடல் பருமனுடன் இருக்காங்க.”
அதாவது நம் உடல் ஒரு ஏ.கே.47 துப்பாக்கி மாதிரி. எபிஜீன்கள் தோட்டாக்கள் மாதிரி. ‘லைப் ஸ்டைல்’ சரியாக இல்லை என்றால் நம்மை நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதற்குச் சமம்!”
நல்ல உதாரணம். பெற்றோருக்கு டயபடீஸ் என்றால் நமக்கும் வரும்னு அவசியமில்ல. டயபடீஸ் வேணுமா வேண்டாமான்னு நாமதான் முடிவு பண்ணணும்.”
அப்ப நாம சாப்பிடற மருந்து, மாத்திரைங்க நம்ம குழந்தைகள பாதிக்குமா?”
நிச்சயம். இதில் என்ன கொடுமைனா பல ரசாயனக் காப்புரிமை பெற்ற நவீன மருந்துகள் நீரிழிவு எபிஜெனிடிக் தூண்டுதல்களைச் செய்யல்படுத்த முடியும். டயபடீஸ் மட்டும் இல்லை, ஆட்டோ இம் யூன் குறைபாடுகள், மறதி, அல்சைமர், புற்றுநோய் என்று ஒரு பெரிய லிஸ்டே போடலாம்.”
கேட்கவே பயமா இருக்கு! நம் உடல் ஏன் குண்டாகிறது? உடல் பருமனுக்கும் டயபடீஸுக் கும் என்ன சம்பந்தம்?”
இருக்கு. அதிக இன்சுலின் சுரப்பதால் ‘பை ஒன் கெட் ஒன் ஆஃபர்’ மாதிரி உடல் பருமன், டைப்-2 டயபடீஸ் ரெண்டும் ஜோடியாக வரும். இந்த ஜோடிக்குப் பெயர் – டயபசிட்டி.”
தாத்தா அப்பா காலத்து கறுப்பு வெள்ளை குரூப் ஃபோட்டோவை கவனிச்சா உங்களுக்கே புரியும். அதில கிட்டத்தட்ட எல்லாரும் ஒல்லியா இருப்பாங்க. இன்னிக்கு நாலாங்கிளாஸ் கலர் போட்டோல எட்டு பேர் நிற்க வேண்டிய இடத்துல நாலு பசங்கதான்.”
இது எப்ப டாக்டர் ஆரம்பிச்சது?”
இன்னிக்கு நேத்தைக்கு இல்ல, கடந்த இருவது வருடமாக உடல் பருமன் பரவிவருகிறது. ஒபிசிட்டி என்பது ‘எபிடமிக்’.”90ல 15% ஆக இருந்த உடல் பருமன் 2010ல 40% என்று எகிறிடுத்து அமெரிக்கால.”
இந்தியால…?”
ஒலிம்பிக்ஸ் மாதிரி மூணாவது இடத்துல இருக்கு. 1980 முதல் 2013 வரை 50 பர்சென்ட் குண்டாயிட்டாங்க; நம்ம சென்னையில 70 பர்சென்ட்டுன்னு புள்ளிவிவரம் சொல்லுது.”
ஆனா இப்ப நிறைய பேர் வாக்கிங் போறாங்களே?”
பனகல் பூங்கால கட்சி ஊர்வலம் மாதிரி சாரை சாரையாய் நடந்தா உடல் இளைக்காது. நடந்தா ஒல்லியாகலாம் என்பது ஒருவிதமான மூட நம்பிக்கை.”
ஆச்சர்யமா இருக்கு. அப்ப உடற்பயிற்சி தேவையே இல்லையா?”
நன்மைகள் இருக்கு. ஆனா அதனால்தான் உடல் இளைக்கும் என்பது கட்டுக்கதை. இங்கிலாந்தை எடுத்துக்கிட்டா 1997 முதல் 2008 வரை உடற்பயிற்சி 32 சதவிகிதம் அதிகமாச்சு. கூடவே உடல் பருமனும் 10 சதவிகிதம் கூடியது. இங்கிலாந்துல மட்டுமில்லை, அமெரிக்கவில் 20 பர்சென்ட் உயர்ந்தது. மத்த நாடுகளிலும் இதே நிலைமைதான்.
மக்களோட ஒரே குறிக்கோள் உடம்பைக் குறைச்சு ஒல்லியாவதுதான். இன்னொரு விஷயம், நெதர்லாந்து, இத்தாலியில உடற்பயிற்சி செயறவங்க கம்மி. அங்கே ஒபிசிட்டியும் குறைவு. அதனால எக்ஸர்சைஸுக்கும் உடல் பருமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”
ஆனா இன்றும் பூரி மசால் மாதிரி, உடற்பயிற்சியும் டயட்டையும்தானே பரிந்துரைக்கிறாங்க?”
யெஸ். உடற்பயிற்சி நல்லதுதான். பல் தேய்ப்பது மாதிரி. ஆனா முன்ன சொன்னா மாதிரி உடம்பை குறைக்கப் பயன்படாது. இப்ப இருக்கிற சில டாக்டர்களே குண்டா இருக்காங்க.”
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ அது போல உடல் பருமனுக்கு எதுதான் பிரச்னை டாக்டர்?”
கடந்த 20 வருஷத்தில் என்ன என்ன மாறுதல்கள்? யோசிச்சுப் பாருங்க. அடிக்கடி இடைவெளி இல்லாம விதவிதமா வாயில் ஏதாவது போட்டுக்கொண்டே இருக்கோம். நாம சாப்பிடும் சாப்பாட்டில்தான் கார்பரேட் கம்பெனிங்க லாபம் பார்க்குறாங்க.”
விவரமா சொல்லுங்க டாக்டர்?”
பிரேக்ஃபாஸ்ட் என்ற காலை உணவை எட்டரைக்குள்ள சாப்பிடாட்டி தெய்வ குத்தம் போலாகி ரொம்ப நாள் ஆச்சு. கேல்சியம் கிடைக்க குழந்தை போல நிறைய பால் குடிக்க வைக்கிறாங்க. ‘லோ-கேலரி’, ‘லோ-ஃபேட்’, ‘0%’ , ‘டயட்’ கொட்டை எழுத்துகளைக்கொண்டு மூளைச் சலவை செஞ்சுட்டாங்க. சின்னப் பசங்கள ‘நீ சூப்பர் மேன் மாதிரி ஆகலாம்’ன்னு கலர் கலரா குடிக்கவைக்கிறாங்க.”
கரெக்ட் டாக்டர், இப்ப நாம கடையில வாங்கிச் சாப்பிடற பல பாக்கெட் தின்பண்டங்க நம் தாத்தா, பாட்டி கேள்விப்படாதது!”
கூடவே நீண்ட நாள் ‘ஷெல்ப் லைஃபை’ கூட்ட, சுத்திகரிக்க, பதப்படுத்த வாயில் நுழையாத எதை எதையோ சேர்க்கறாங்க.”
இதனாலதான் இன்னிக்கு வீட்டுக்கு ஒருத்தர் அமெரிக்கால இருக்கா மாதிரி வீட்டுக்கு ஒருத்தர் டயபட்டிக்.80% டயபடீஸ் உள்ளவங்க குண்டாவும் இருக்காங்க.”
ஏழு வினாடிக்கு ஒருத்தர் டயபட்டீஸ்னால இறக்கிறாங்க. உயிர் இழப்புக்குக் காரணம்? துப்பாக்கியால தானே சுட்டுக் கொள்கிறார்!”
ஒரு புஸ்தகத்தில படிச்சேன் மனுஷங்க மட்டும்தான் குண்டாகுறாங்க, மிருகங்கள் வெயிட்போடுவதில்லை என்று.”
உண்மைதான். பொதுவாக யானை, நாய், மாடு, கோழி என்று எதுவும் வெயிட் போடாது. ஆனால் வீட்டில அல்லது பண்ணையில் இருந்தா குண்டாகி விடும். இயற்கை உணவை அதற்குக் கொடுக்காம, நாம் சாப்பிடுவதுபோல அவற்றுக்கும் சாப்பிடக் கொடுப்பதால்தான்.”
காட்டு யானை, கடலில் திமிங்கிலம் எல்லாம் ஒரு நாளைக்கு 50 கிலோ சாப்பிட்டும் வெயிட் போடுவதில்லை. அதன் குட்டிகளும் அப்படியே. ஆனா நம் குழந்தைங்க இன்று குண்டாகவே பிறக்கிறது. ஏன் டாக்டர்?”
நம்ம சாப்பாடு மூலம் ஏற்படும் ஹார்மோன் இன்பேலன்ஸ்தான். இன்னொரு விஷயம். வீட்டு எலியைவிட ஆராய்ச்சிக்கூடத்தில உள்ள எலிங்க குண்டாக இருக்கும். அவற்றுக்கும் நமக்கு வரக்கூடிய எல்லா நோய்களும், டயபடீஸ் உட்பட வருகிறது.”
எதனால் குண்டாகிறது?”
பல காரணங்கள் உண்டு. முக்கியமா ஆராய்ச்சிக்கு உட்பட்ட பிராணிகள் குண்டாவதற்கு ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு மற்றும் வளர்சிதை மாற்றம் தான் காரணம்.
1930 முதல் 1960 வரை ஆராய்ச்சிக் கூடத்தில எலிகளை குண்டாக்குவதற்கு ஹைப்போத்தாலமஸ் (Hypothalamus)என்ற மூளை அடிப்பகுதியில சின்ன ஊசியைக் குத்திவைக்கும் முறையைக் கடைப்பிடிச்சாங்க. ஹார்மோன்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் இடம் அதுதான்.”
குண்டாக இருப்பதனால நிறைய சாப்பிடுறாங்களா? இல்ல நிறைய சாப்பிட்டு அதனால குண்டாகிறாங்களா?”
டயபடீஸ், உடல் பருமன் இரண்டுக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன்தான் முக்கிய காரணம். அதை அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம்.”
-நன்றி கல்கி
Source: Balhanuman November 3, 2016 
https://balhanuman.wordpress.com/2016/11/03/2%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE/

Thursday, December 8, 2016

நெருங்காதே நீரிழிவே! 1 டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்

nn
சமீபத்தில் டாக்டர் விஜயராகவன் அவர்களைச் சந்தித்தேன்.
நோ நான்சென்ஸ் டாக்டர்’ கட்டுரையைப் படிச்ச வாசகர்கள் இன்னிக்கும் அதைப்பத்திக் கேட்கறாங்க” என்றேன்.
அப்படியா? என்ன மாதிரியான கேள்விகள்?”
டயபடீஸ் வந்தால் ஜென்மத்துக்கும் மாத்திரை எடுத்துக்கொண்டு சமாளிக்கலாம், ஆனால் சரிப்படுத்த முடியாதே? ஆனா நீங்க உங்க கட்டுரையில் சரியாகிவிட்டது என்று சொன்னதை நம்ப மாட்டேங்கிறாங்க” என்று ஆரம்பித்தேன்.
ஏன் நாம சேர்ந்து இதைப் பத்தி எழுதி ஒரு நல்ல விழிப்புணர்ச்சியைக் கொண்டு வரக்கூடாது?”
குட் ஐடியா டாக்டர். நம்ம டிஸ்கஷனை அப்படியே எழுதிடலாம்.”
நீங்க கேட்ட கேள்விக்குப் பதில்” என்று டாக்டர் என்னிடம் ஒரு படத்தைக் காண்பித்து இந்த யானைக்கு எவ்வளவு கால்கள்?” என்றார்.
யானைக்கு நான்கு கால்கள்தானே என்று சந்தேகத்துடன் படத்தைப் பார்த்தேன். நான்கா, ஐந்தா என்று குழம்பி, இது வெறும் இல்யூஷன்” என்றேன்.
ஆமாம். நாம பார்க்கிறத பொறுத்துதான் எல்லாமே. உலகத்தில டிவிட்டர், கூகிள் நேத்து வந்த புது ஐபோன்வரை எவ்வளவோ விஷயங்களைப் பார்த்து வியக்கிறோம். என்றாவது நம் உடலைப் பார்த்து வியந்திருக்கிறோமா?
கம்ப்யூட்டர் புரோக்ராம் மாதிரி நம் உடல் நூறு வருஷம் எந்த நோயும் இல்லாம வாழ புரோக்ராம் செய்யப்பட்டது. உடல் ஆரோக்கியமாகவும் அதேசமயம் தன்னைத்தானே குணப்படுத்திக்கவும் சூட்சுமங்கள் அந்த புரோக்ராமிலேயே அடங்கியிருக்கு!”
அட!”
ஆனா, கம்ப்யூட்டர் புரோக்ராமை வைரஸ் தாக்கறா மாதிரி இன்னிக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன், கொழுப்புக் கோளாறுகள், தைராய்டு செயலிழப்பு, ஆட்டோ இம்யூன் குறைபாடுகள், புற்றுநோய், அல்சைமர் நோய், மறதி இன்னும் பல வியாதிங்க தாக்கிக்கொண்டு இருக்கு. இதெல்லாம் வியாதிகள் இல்ல! மாறி வரும் வாழ்க்கை முறையால் (லைஃப் ஸ்டைல்) நம்ம உடம்பு நமக்குச் சொல்லும் சமிக்ஞைகள். சுலபமாகப் புரிய, வைரஸ் தாக்கிய கம்ப்யூட்டர் குழம்பிப்போய் எப்படி தப்புத் தப்பா செயல்படுமோ அதுபோல நம் உடலும் குழம்பிப் போக ஆரம்பிக்கிறது. இவை நம் உடல் நமக்குக் காண்பிக்கும் சிவப்பு சிக்னல்கள்.”
டாக்டர், அப்படினா மருந்து மாத்திரை எதுவும் வேண்டாமா? நீரிழிவு தன்னால சரியாயிடுமா?”
அப்படியில்ல. வைரஸ் வந்தால் கம்ப்யூட்டரை உடனே கிளீன் செய்து, அப்பறம் அந்த கம்ப்யூட்டரை ஒழுங்காக எப்படி மெயின்டென் செய்கிறோமோ, அதேபோல நம் உடலையும் பாதுகாக்கணும். ஆனா நாம் அப்படிச் செய்யறதில்ல என்பது தான் பிரச்னையே.”
உடம்புல காயங்களுக்கு மருந்து அவசியம் தானே!”
நிச்சயமா. நம் உடம்புல மூன்று விதமான காயங்கள் ஏற்படுகிறது. ஆங்கிலத்தில 3-T என்று சொல்லுவாங்க.Trauma, Toxin, Thought!
முதல் Tக்கு உதாரணமான நாம் விழுந்து அடிபட்டா ஏற்படும் வலி?”
கரெக்ட்.”
அடுத்த T நச்சுத்தன்மை, விஷம், பொல்யூஷன், புகை.”ஆமாம். அதனால்தான் நமக்குச் சில சமயம் ‘ஃபுட் பாய்சன்’ ஆகிறது.”
கடைசி-T, கவலை. குடும்ப, அலுவலக பிரச்னை, வியாபாரத்தில் நஷ்டம் அதனால வரும் மன உளைச்சல்.”
இந்த மூணு‘T’யில் ஏதாவது ஒன்ணு ஏற்பட்டாலும், உடனே நம் மூளை நம்மள காப்பாத்த முனைந்து, ஆபத்தை எதிர்த்து ஹீரோ போல சண்டை போட வேண்டுமா அல்லது வில்லன் போல ஓட்டம் பிடிக்கவேண்டுமா என்று முடிவு செய்யும்.”
ஆதி மனுஷன், இயற்கைச் சீற்றம், தொற்றுநோய், கொடிய விலங்குகளிடமிருந்து காத்துக் கொண்டு வாழ்ந்தான். ஆனால், இன்னிக்கு நவீன அண்ட்ராய்டு மனுஷன் கொடிய விலங்குகளிடமிருந்து சுலபமாகத் தப்பித்துப் பல கொடிய நோய்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறான்.”
ஆனா மருத்துவத் துறை முன்னேற்றத்தை மறுக்க முடியாதே?”
ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, இன்றைய மருத்துவத்துக்கும் இரண்டு பக்கங்கள்!”
ஜூலை மாசம் கோவையில ஓரு விபத்து. ஒரு பெண்மணி அடிபட்டு ‘பிரெயின் டெட்’. அவங்க உடல் உறுப்புகளை ஆம்புலன்ஸில் போக்குவரத்தை நிறுத்தி விமான நிலையத்துக்குக் கொண்டு சேர்த்தாங்க.
“ஆமாம் டாக்டர் நானும் படித்தேன்.”
ஒரு சிறுநீரகம் கே.ஜி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை மியாட் மருத்துவமனைக்கும், 2 கண்கள் கோவை சங்கரா மருத்துவமனைக்கும், இருதய வால்வு சென்னை மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் அனுப்பி உடனே பொருத்திட்டாங்க. இதனால 6 பேருக்கு மறுவாழ்வு கிடைச்சுது. இது மருத்துவ வளர்ச்சியின் தி பிரைட்சைட். ஆனா ‘கிரானிக்’ அதாவது நாள்பட்ட கடுமையான நோய்களுக்கு நம் மருத்துவத்துறை முற்றிலும் தவறு செஞ்சு பல உயிர்களை அழிக்கிறது.”
விரிவா சொல்லுங்க டாக்டர்?”
இன்றைய தேதியில டயபடீஸ், இதயநோய், தைராய்ட் எல்லாம் விஜய், அஜித்போல பழக்கப்பட்ட பெயராயிடுத்து.”
இதுக்குதான் விதவிதமா மருந்துகள் இருக்கே?”
இருக்கு, ஆனால் நவீன மருத்துவம் இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு சொல்லாம, மேலும் மேலும் பெரிசாக்குது.”
கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்?”
டயபடீஸ் என்ற நீரழிவு, ஒபீஸ் என்ற உடல் பருமன் வளர்சிதைக் கோளாறால் ஏற்படுது. ஆங்கிலத்தில –Metabolic disorderன்னு சொல்லுவாங்க. உடலில் வளர்ச்சிக்காக ஏற்படும் வேதியியல் ரசாயன மாற்றங்கள்தான் – Metabolism. அதில் கோளாறு ஏற்பட்டால்?
ஒரு மரத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்க. இதில் எப்படிக் கோளாறு ஏற்படுது? முன்பு பார்த்த 3- Tநினைவு இருக்கிறதா?”
காயம், நச்சு, எண்ணங்கள்.”
இவைதான் வேர்கள். எது நடந்தாலும், எதிர் வினையாக பல ரசாயன மாற்றங்கள் அடுக்கடுக்காக ஏற்படுத்தும்.”
இதைத்தானே டாக்டர் ஹார்மோன் என்கிறோம்?”
ஆமாம். சக்கரை சாப்பிட்டா இன்சுலினும், அதிக மனஅழுத்தம் இருந்தா கார்டிசொல் போன்ற ஹார்மோன்களும் சுரக்குது.”
இவை எல்லாம் நம் உடம்புக்குத் தேவைதானே?”
எல்லாமே தேவைதான். ஆனா அதிகமானாலோ அல்லது குறைவானாலோதான் பல பிரச்னைகள் வரும். டயபடீஸ், உடல் பருமன், ஹைப்பர் டென்ஷன், தைராய்ட் என்று கிளைவிட்டு மரம் செழிப்பாக வளரும்.”
ஓ!”
நவீன மருத்துவம் கிளைகளை வெட்டுகிறதே தவிர மூலகாரணமான வேர்களை அப்படியே விட்டுவிடுகிறது. உடலியக்கத்தைச் சின்ன ரசாயனப் பொருளைக் கொண்டு, அதாவது மருந்து மாத்திரைகளைக் கொண்டு கட்டுப்படுத்த பார்க்கிறோம்.
நம் உடல் சீராக இயங்கக் கூடிய ஓர் அருமையான இயந்திரம். சைக்கிள் செயினில் அதிக எண்ணெய் போட்டால் செயின் கழண்டுவிடும். அதேபோல்தான் நம் உடலும். அதிக மாத்திரை எடுத்தால் ரிப்பேர் ஆகிவிடும்.
இன்னொரு உதாரணம் சொல்றேன். நம் உடல் கிச்சன் ‘சிங்க்’ மாதிரி. தண்ணீர் சுத்தமா இருந்தா சீராக வெளியேறும். ஆனா அதிக அழுக்கு சேர்ந்தா அடைத்துக்கொள்ளும். 3Tதான் அடைத்துக் கொள்ளும் அழுக்கு!”
அந்த அழுக்கை எப்படி அகற்ற வேண்டும் என்று அடுத்த வாரம் பார்க்கலாம்.
(தொடரும்)
–நன்றி கல்கி
Source: Balhanuman's Blog October 27, 2016 https://balhanuman.wordpress.com/2016/10/27/1%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95/
Related Posts Plugin for WordPress, Blogger...